திங்கள், 12 ஆகஸ்ட், 2024

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்துப் பெற்றார்.



இது பற்றிய செய்தியாவது 

சென்னை மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்த பெற்றார் .

அவருக்கு கனிமொழி எம்.பி சால்வை அணிவித்தார். 

அப்போது கனிமொழி எம்.பி கலந்துரையாடலின் போது, திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும்.


 தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். 


ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார்.


 அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள்.


 உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாரிடம் கனிமொழி எம்.பி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக