புதன், 28 ஆகஸ்ட், 2024

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

 2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 ெதாகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்



     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.


 அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.


    தமிழகம் முழுவதும் உள்ள ஓவ்வொரு அணியின் செயலாளர்கள், துணைச்செயலாளா்கள் ஆகியோருடன் கலந்துரையாடி வருகிறார். 


அதன்படி சென்னை அறிவாலயத்தில் மாநில நெசவாளர்கள் அணி சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாநில செயலாளர் பெருமாள், துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் 

 நிர்வாகிகளிடம்  உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடலில் கூறியதாவது  ....


   “திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.



 ஏற்கனவே ..தலைவர் ஸ்டாலின் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார்.


 அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் .



உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக