திங்கள், 19 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் நாளை 20-8-2024 இருக்காது

 தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை 20-8-2024 இருக்காது என 

தூத்துக்குடி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



இதுபற்றி செய்தியாவது:-

 தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர்  மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய  பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20. 8. 2024 செவ்வாய் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.


 எனவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. 

ஆகவே,  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் திரு. லி. மதுபாலன், இ. ஆ .ப  தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக