புதன், 7 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பாலத்தில் விபத்து பைக் மீது வாகனம் மோதி ஒருவர் இறப்பு!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பாலத்தில் விபத்து பைக் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது சம்பவ இடத்திலேயே பைக் ஒட்டியவர் பரிதாபமாக உயிரிழந்தார் 




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முனபு பாலம் சரிவில் இன்று 7-8-2024 மதியம் 2- மணியளவில் பைக் மீது வேகமாக வந்த வாகனம் மோதி இடித்து விட்டு நிற்காமல் வாகனம் தப்பி சென்று விட்டது


 வேகமாக வந்த வாகனம் மோதியதில் பைக் ஒட்டி வந்தவர் பைக் கில் நிலைகுலைந்து  தூக்கியெறிப்பட்டார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடித்து இறந்து போனார் 




அருகில் விசாரித்ததில் இறந்தவர் சமுத்திர பாண்டி (50) என்றும் இவர் தனியார் மீன் பதனிடும் நிறுவனம் (நிலா  பட்ஸ் )பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.



இந்த துயர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக