வியாழன், 15 ஆகஸ்ட், 2024

தேசிய கொடி ஏற்றப்படாததால் வெறிச்சோடிய தூத்துக்குடி மாநகராட்சி!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

[15/8, 11:40 AM] அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி 

மாநகராட்சியில் சுதந்திர தினம் கொடியேற்று விழா தேசிய கொடி ஏற்றப்படாததால் வெறிச்சோடி கிடந்தது


இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி மாநகராட்சி யில் இன்று  சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெறவில்லை

 

இந்தியா வில் 78 வது சுதந்திர தினம் அரசு அலுவலகங்கள் மாநகராட்சி நகராட்சி பள்ளி கல்லூரிகள்  அனைத்திலும் கொடியேற்று விழா நடைபெறும்.


ஆனால்? 

என்ன காரணம் என்று தெரியவில்லை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 15 அன்று காலையில் வழக்கமாக நடைபெறும் தேசிய கொடியேற்று நிகழ்வு நடைபெறவில்லை 

இதுவே முதல் தடவை!!!

சுதந்திரம் கிடைத்த 

78 வருட ங்களில்...?

"தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றாதது இதுவே முதல் தடவையாக உற்று நோக்கப்படுகிறது."


தற்போது...

தமிழகத்தில் 

தூத்துக்குடி மாநகராட்சி 

இரண்டாவது சிறந்த மாநகராட்சி ஆக விருது தேர்வு செய்ய ப்பட்டுள்ளது 


அதையொட்டி சென்னை யில் நடைபெறும்...

 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்  சுதந்திர தின விழாவில் இரண்டாவதாக விருது தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி   விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் மதுபாலன் இஆப ஆகியோர்   சென்னைக்கு சென்றுவிட்டார்கள்



உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு தூத்துக்குடி சிறந்த 2- வது மாநகராட்சி விருது மேயர் ஜெகன் பெரியசாமி இடம் வழங்கிறார்அருகில் ஆணையர் மதுபாலன் 

இதனால் 

தூத்துக்குடியில்.. மாநகராட்சி இன்று சுதந்திர தின  கொடியேற்றம் நடைபெறவில்லை


 தூத்துக்குடி மாநகராட்சி துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் இவராவது...?

இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றுவார்கள் என எதிர்பார்த்தனர்!!!!!

 தூத்துக்குடி மாநகராட்சி க்கு வரவில்லை 


அடுத்து தலைமை பொறியாளர் தலைமையில் கொடி ஏற்றுவார்களா என்றால் யாருமே முன் வரவில்லை?


இன்று ..

தூத்துக்குடி மாநகராட்சி யில் தேசிய கொடி ஏற்று விழா நிகழ்ச்சி நடைபெறாமல் அப் பகுதி வெறிச்சோடி காணப் படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக