புதன், 3 ஜூலை, 2024

தொடர் திருட்டு தூத்துக்குடி காவல்துறை திருடனை கண்டு பிடிக்க அப்பகுதி வியாபாரிகள் வேண்டு கோள்!!

 

தூத்துக்குடியில் ஒரே பகுதியில் தொடர் திருட்டு  சம்பவங்கள் தூத்துக்குடி காவல்துறை திருடனை கண்டு பிடிக்க அப்பகுதி வியாபாரிகள் வேண்டு கோள்!!

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் உள்ள சிவதர்ஷிகா பிராய்லர் கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை திறந்து ரொக்கப்பணம் 3500/- ரூபாயை திருடி சென்று உள்ளார்கள்.



 சென்ற 15 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பழக்கடையில் திருட்டு சம்பவம் நடந்தது குறித்து விசாரணை நடந்து வரும் நேரத்தில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்தது


 வியாபாரிகள்,வணிகர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது


 இந்த இரண்டு கொள்ளை சம்பவத்திற்கு உரியவர்களை காவல்துறையினர்கள் விரைவில் கைது செய்ய வியாபாரிகள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக