வியாழன், 4 ஜூலை, 2024

கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டினால் ரூபாய் 2000 அபராதம் தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டிடங்கள் கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டி செயல் பட்டு வருகின்றனர் .



இவர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி தெரிவித்துள்ளது.


திடக்கழிவு கொட்டும் இடங்கள் எவையெவை தெரிந்து கொள்ளுங்கள் 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் அபிவிருத்தி மற்றும் புதிதாக கட்டிடம் கட்டும்போது.... ஏற்படக்கூடிய சேகரமாகக் கூடிய கட்டிட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள...

இடங்கள் 

 தாழ்வான பகுதிகளான... ஆதிபராசக்தி நகர் பூங்கா திறவிடம்


 ரஹமத் நகர் ராம் நகர் பூங்கா  திறவிடம்


 கதிர்வேல் நகர் பூங்கா பகுதிகள் 


அம்பேத்கார் நகர்  திறவிடம் 

ஓம் சாந்தி நகர்

 மார்ட்டினா நகர்

 அய்யாசாமி காலனி திறவிடங்கள்,

மடத்தூர் ரோடு சந்திப்பு தாழ்வான பகுதிகள்


 தருவைகுளம் உரக்கடங்கு, 

தனசேகர் நகர் மேற்கு பகுதிகள் 


மாநகராட்சி பாளை ரோடுஇடுகாடு வளாகம்  ....


ஆகிய பகுதிகளுக்கு கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்காக பொதுமக்களின் வசதிக்காக இடங்கள் தேர்வு  செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


 

இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் பல்வேறு பகுதிகளில் கட்டிடக்கழிவுகள் ஆங்காங்கே குவியலாக குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

ரூபாய் 2000 அபராதம் 

 இவ்வாறான நிலையில்..

தூத்துக்குடி மாநகராட்சி  அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.


 அப்போது  நான்கு கட்டிடங்கள் கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டி இடையூறு ஏற்படுத்திய செயல் கண்டறியப்பட்டு தலா 2000/- வீதம் நான்கு கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.8000/-  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் 


 எனவே, இனிவரும் காலங்களில் ...?

கட்டிடம் கட்டுவோர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள முறையான இடங்களில் கட்டுமான கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தெரிவிக்கப்படுகிறது.


 தவறும் நிலையில் கட்டுமான விதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக