▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
24-5-2024
photo news by
sunmugasunthram Reporter
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் என்.பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் அனுசரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ...
என்.பெரியசாமி சிறுவயது முதல் தி.மு.கழகத்தில் இணைந்து வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர். பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம். தன்பாடு உப்பு சுமை மூடை தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களுக்கு தலைவராக இருந்தார்.
அதனை தொடர்ந்து 1986 - ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாக உதயமான நாள் முதல் தன் இறுதிக் காலம் வரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.
1986 ல் தூத்துக்குடி நகரமன்ற தலைவர், 1989, 1996 ஆண்டுகளில் 2- முறை சட்டப்பேரவை உறுப்பினர் என பதவி வகித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு எண்ணற்ற நல்ல திட்டப் பணிகளை கொண்டு வந்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞரால் தன்னுடைய 'முரட்டு பக்தன் என்று பாராட்டப்பட்டவர். இன்றைய கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அன்பை பெற்றவர்.
தூத்துக்குடி வளர்ச்சியின் நலனில் அக்கறையுடன் செயலாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற மே 26 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் அன்னாரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக