புதன், 3 ஏப்ரல், 2024

அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி டெபாசிட் இழப்பார் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரசாரமான பேச்சு

thoothukudileaks 

3-4-2024

Photo news 

by arunan journalist 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி டெபாசிட் இழப்பார் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரசாரமான பேச்சு 



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்களவைத் தொகுதி  திமுக  காரியாலயத்தை முப்பிலிபட்டி கிராமத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



 ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் திறப்பு விழா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில்.... 

முப்பிலிபட்டி கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 




திமுக காரியாலயம் திறந்து வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

திமுக வேட்பாளர் கனிமொழி யை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி படுதோல்வி அடைந்து டெபாசிட் இழப்பார் என காரசாரமாக பேசினார் 



கனிமொழி தான் வெற்றி  பெறுவார்கள் நீங்கள் அனைவரும் அதற்காக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


சமீபத்தில்.. அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றி கூட்டத்தில்

 இங்கு வந்தால்...எப்போதும் கனிமொழி சுற்றி இருப்பவர்கள் பபூன் மாதிரி பியூன் ஆக தான் சுற்றி வருவார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்று கிண்டலாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலடியாக தான் காரியாலயம் திறப்பு விழா வில் பேசியுள்ளார் என்கிறார்கள்.


முப்பிலிப்பட்டி திமுக காரியாலயம் நிகழ்ச்சிக்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா முன்னிலை வகித்தனர். 


 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மொட்டையசாமி, அவைத்தலைவர் சுப்பிரமணியன், இளைஞரணி அனிஸ்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக