ஞாயிறு, 1 மார்ச், 2026

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு எதிர்ப்பு கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது என்ன?

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 1-3-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 1 

தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

thoothukudileaks


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை கொண்டு தனித்த அணியை நடத்தி வந்த ஓபிஎஸ், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை  சந்தித்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த 12 மாவட்ட செயலாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மா செ ஏசாதுரை தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம்!!!

இந்நிலையில், இன்று (01-03-2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பிலுள்ள கனி ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks



thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தி என உரக்கக் கூறிய திமுகவுடன் இணைந்ததை ஏற்க முடியாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பலர், “நமக்கு உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவில் மீண்டும் இணையலாம்” என கருத்து தெரிவித்தனர். சிலர் “சின்னம்மா சசிகலா அணியுடன் இணையலாம்” எனவும் முன்மொழிந்தனர்.

thoothukudileaks


மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தனது உரையில்,

 “உங்கள் கருத்தே என் எண்ணமும் செயலுமாகும். ஜெயலலிதா அவர்கள் தீய சக்தி என குறிப்பிட்ட திமுகவில் ஒபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

ரகசிய ஆலோசனை கூட்டம் என்பதால் தங்கள் இடம் தெரிவிக்கிறேன்  தற்போது அதிமுக எடப்பாடி தரப்பிலும், சின்னம்மா தரப்பிலும் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு மரியாதை தருபவர்களுடன் இணைவது குறித்து இன்னும் இரண்டு நாளில் தீர்மானிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலத்த கைதட்டலுடன் ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக