வியாழன், 25 ஜனவரி, 2024

நியூஸ் 7 டிவி நிருபர் நேச பிரபு மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதல்

 நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி கோவை கங்கா மருத்துவமனை மில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

கொலைவெறி தாக்குதலுக்குள்ளான நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு

 5 வாகனங்களில் வந்தவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


இது தொடர்பாக 4 மணிநேரங்களுக்கு முன்னரே தன்னை பின்தொடரும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.


 தன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் 4 மணிநேரம் அலைக்கழித்திருக்கிறது காவல்துறை... தன்னை சுற்றி வளைக்கிறார்கள் என காவல்துறையினரிடம் தெரிவித்தபோது, காவல் நிலையத்தில் ஆள் இல்லை நீங்கள் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள்,  புகார் அளியுங்கள் என தெரிவித்திருக்கிறார்கள் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் .. இந்த அலட்சியம் தான் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நிகழ முதல் காரணம்.. அமைந்துள்ளது என்கிறார்கள்.


இது தொடர்பாக பத்திரிகையாளர் மத்தியில் வன்மையான கண்டனங்கள்... குற்றவாளிகளும், பாதுகாக்க தவறிய காவல்துறையினரும் தண்டிக்கப்பட வேண்டும்.. என்று தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக