சனி, 30 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி லீக்ஸ் 1-10--2023

செய்தி &புகைப்படங்கள்

அருணன் செய்தியாளர்

தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்தார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள்மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற

பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டம் தூத்துக்குடியில் அண்ணா பழைய பேருந்து நிலையம் கனிஸ் ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில் 01.10.2023 முற்பகலில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

தலைமை

தோழர் மு.போத்தியடியான்

தோழர் இராமசுப்பு

வரவேற்புரை

: தோழர் S.சீனிவாசன்

தலைவர்களின் படத்திறப்பு : தோழர் M.இராமலிங்கம்

படத்திறப்பு 


வாழ்த்துரை

: தோழர் R.ரெங்கன் ஏஐடியுசி திருநெல்வேலி மாவட்டம்

தோழர் A.P.சிவசுப்பிரமணியன் முன்னாள் பொது மேலாளர்

தூத்துக்குடி மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி

தோழர் P.சக்திவேல், பொதுச்செயலாளர்,

தூத்துக்குடி நகர வங்கி ஊழியர்கள் சங்கம்

தோழர் P.லோகநாதன் பொதுச்செயலாளர்

ஏஐடியுசி தூத்துக்குடி மாவட்டம்

தோழர் பா.மயிலேறும் பெருமாள் பொதுச்செயலாளர்

தோழர் S.பொன்சாமி, பொருளாளர்

தோழர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,

வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு, தூத்துக்குடி

17-10-2023 அன்று வேலைநிறுத்தம் 


தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில்

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17.10.2023 அன்று கூட்டுறவு வங்கி

ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

கோரிக்கைகள்

1 கூட்டுறவு நகர வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை

ஓய்வூதியம் அனுமதித்தல்.

2அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோப்பின்

மீது தொடர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தல்.

 3 கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு உரிய

பதவி உயர்வு வழங்க ஆணையிடுதல்.

4 கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை

உரிய பணிநியமனம் மூலம் நிரப்புதல்.

5 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில்

மென்பொருளை மேம்படுத்துதல்.

6 நிறுத்தி வைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டு தோறும் பணமாக்கும்

சலுகையை மீண்டும் அனுமதித்தல்.

7வங்கி பணியிடங்களில் வணிக வங்கிகளில் உள்ள நடைமுறை போல்

IBPS மூலம் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

video 

இவ்வாறு தெரிவித்தனர் நிகழ்ச்சி முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.




 தொடர்பு:-

தோழர் மயிலோறும் பெருமாள்

கைப்பேசி எண் : 7598787414


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக