புதன், 3 மே, 2023

அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உலக பத்திரிகை யாளர் தினம் முன்னிட்டு தூத்துக்குடி செய்தியாளர் கள் சந்திப்பு வாழ்த்துக்கள் தெரிவிப்பு !!!

thoothukudileaks 3-5-2023

Photo & news 

த.சண்முகசுந்தரம் மூத்தபத்திரிகையாளர் 

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர். செய்தியாளர் கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.



இதுபற்றி செய்தியாவது:-

உலக பத்திரிகை சுதந்திர நாள் மே3 ம் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது 

உலக பத்திரிகையாளர் தினம் முன்னிட்டு ... இன்று 3-5-2023

 தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்து உலக பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தூத்துக்குடி செய்தியாளர் கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள.

இந்நிகழ்வில் மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பால குருசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், பத்திரிகையாளர்கள் சண்முக சுந்தரம், பிரபாகரன், ஜாய்சன், சந்திரன், மோகன்ராஜ், முத்துராமன், மாரிராஜா, ஜெகஜீவன், விக்னேஷ்வரன், மணிகண்டன், செல்வின் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக