புதன், 3 மே, 2023

தூத்துக்குடியில்14- வந்து வார்டில் தண்ணீர்பந்தல் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி திறப்பு

 thoothukudileaks 4-5-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடியில் தண்ணீர்பந்தல் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி திறப்பு



இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அதன்படி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.

      இந்நிலையில் 14வது வார்டுக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர திமுக துணைச்செயலாளரும் மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை வகித்தார். தண்ணீர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர். தர்பூசனி, நுங்கு, அண்ணாச்சிபழம், மோர், மற்றும் பல்வேறு வகையான குளிர்பானங்களை வழங்கினார்கள்.

     நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட திமுக பிரதிநிதி செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, காசிராஜன், அல்பட்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக