வியாழன், 6 ஏப்ரல், 2023

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை பொதுமக்கள் பாதிப்பு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

 thoothukudileaks 6-4-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை இதனால் பொதுமக்கள் பாதிப்பு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை 

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சிகளில் 59 கிராமங்கள் உள்ளடங்கிய வளர்ந்து வரும் பெரிய ஊராட்சியாகும்.

காளியம்மான் கோவில் கொடை விழாவில் பாரதிநகர் ஊர் பொதுமக்களுடன்ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் 

கோரிக்கை மனு 

 மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் மின்வாரிய நகர்புறம் வடக்கு உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள கீதாஜீவன் நகரில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பில் மின்சாரம் சில நேரங்களில் உயர்மின் அழுத்தமாகவும் சில நேரங்களில் குறைந்த மின் அழுத்தமாகவும் இருப்பதாகவும் அதனை மின்சார வாரிய ஊழியர்கள் சரிசெய்த பின்னரும் மீண்டும் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை ஏற்படுவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி சேதம் அடைகிறது. 


ஆகவேமேற்குறிப்பிட்டுள்ள கீதாஜீவன் நகரில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்அழுத்த பிரச்சனையை உடனடியாக சரி செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மாப்பிள்ளையூரணி ஊராட்சி பாரதிநகர் காளியம்மான் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து பாரதிநகர் ஊர் பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக