thoothukudileaks 4-4-2023
photo news by shanmuga sunthram
அரசு நிலத்தில் உரிமை கோரி தாக்கல் செய்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டல்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் முள்ளக்காடு கிராமம் சர்வே எண் 744ல் தனது முன்னோர்கள் காலத்திலிருந்து வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாக தெரிவித்து மேற்படி சொத்து எனக்கு சொந்தமானது என உரிமை கோரியும் அரசு தனக்கு எந்த இடஞ்சலும் செய்யக்கூடாது என்றும் தூத்துக்குடி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அரசு தரப்பில் மேற்படி நிலம் அரசுக்கு சொந்தமான பாதை என அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், அரசுக்கு ஆதரவாக வாதித்த இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்தார்.
நீதிபதி சுமிதா பொட்டல்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக