thoothukudileaks 13-4-2024
photo news by arunan
தமிழக ஆளுநர் ரவி யே தமிழ் நாட்டு விட்டு வெளியேறு என்ற கோஷத்துடன் தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசே தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெறு.. ஸ்டெர்லைட் போராட்டத்தை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது :-
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்டம் சார்பாக இன்று 13-4-2023 காலை தமிழக கவர்னர் ரவியை கண்டித்து தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் கண்டண ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி நச்சு ஆலை ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் பங்கு கொண்ட பொதுமக்களை வெளிநாட்டில் பணம் பெற்று கொண்டு போராடியதாக அவதூறாக பேசிய தமிழ் நாடு கவர்னர் ஆர்.என். ரவியின் ஆணவ பேச்சை கண்டித்து மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பார்ட்டம் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாயூர் நாரயணன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்.
மாவட்ட செயலாளர்
அற்புதராஜ் முன்னிலை வகித்தார் சமத்துவ மக்கள் கழக கட்சி மாவட்ட நிர்லா கிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பார்ட் டத்தில் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து நெரிசலான அண்ணாநகரில் ... சமத்துவ மக்கள் கழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்...அப்பகுதியில் தூத்துக்குடி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக