thoothukudileaks 28-3-2023
photo news by soban
தூத்துக்குடி மாவட்டம்
அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் .எஸ்.புவனேஸ்வரிசண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் .
இதையடுத்து, தூத்துக்குடியில் பண்டார விளை பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் .எஸ்.புவனேஸ்வரிசண்முகநாதன் அவர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி, கொண்டாடினர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக