ஞாயிறு, 29 ஜனவரி, 2023

ராகுல் காந்தி யின் ஒற்றுமை பயணம் நிறைவு தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடி ய தூத்துக்குடி காங்கிரஸ்!!! காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த தலைவர்களில் முக்கிய தலைவரான காந்தியடிகள் இறந்த நாளான இந்த நாளில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பட்டாசு வெடித்தனர்

இந்த இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து துவக்கி 150 நாட்கள் 17 மாநிலங்கள் வழியாக 3570 கிலோ மீட்டர் கடந்து காஷ்மீரில் இன்று நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நிறைவை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு ஐ என் டி யு சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்

இனிப்பு லட்டு வழங்கல் 



இன்று இந்திய தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளாக நினைவு நாள் ஜனவரி 30 அனுஷ்டிக்கப்படுகிறது .காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த தலைவர்களில் முக்கிய தலைவரான காந்தியடிகள் இறந்த நாளான இந்த நாளில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக