வெள்ளி, 20 ஜனவரி, 2023

சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா

thoothukudileaks 21-1-2023

photo news by shanmuga Sundaram 


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா நேற்று (20-1-2023) நடைபெற்றது 



இதையொட்டி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு ஊக்கத்தொகை மற்றும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்ளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். 




ராதாபுரம் பங்குதந்தை ராபின், நீம் பவுன்டேசன் இயக்குநர் லூயிஸ் ராஜ்குமார், சிலுவைப்பட்டி ஆர்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் ஹெரால்டு வில்சன், ஊர் தலைவர் அந்தோணி ஜேசுராஜன், தாளமுத்துநகர் பள்ளியின் தாளாளர் பங்குதந்தை நெல்சன் ராஜ், உதவி பங்குதந்தை வின்சன்ட், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பாலம்மாள், கிளைச்செயலாளர் அன்பு மற்றும் அந்தோணி செல்வராஜ், ஜெயசீலன், கௌதம் உள்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் தலைமை ஆசிரியர் ஜேக்கப் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக