ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மனு அளித்தனர்


🤷🏻‍♀️, thoothukudileaks

12-12-2022

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 12-12-2022 காலை 10. மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் _சுமார் 300மேற்பட்டோர் தமிழக மூதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் இடம் புகார் மனு கொடுத்தார் கள். 


மனு கொடுக்க எழுச்சியுடன் வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்



_இதனால் தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் காவல்துறை வாகனம் போலீசார் பாதுகாப்பு பணி‌ என்று நிறுத்த ப்பட்டிருந்தார்கள்_



_இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழக்த்தை விட காவல்துறை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்_




ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

7339110763 9443584049 9488478955 9843412669 9791123059 7305172352

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை.

உரிய வழியாக:

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

தூத்துக்குடி மாவட்டம்,

தூத்துக்குடி.

தேதி:12.12.2022

பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,

நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே.22 & 23, 2018

நாட்களில் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர்

சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் காவல்துறை

அத்துமீறல் இருந்ததா? என்பதை விசாரிக்க கடந்த அதிமுக அரசால்

நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் ஆணையம்

கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.



ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தாங்கள் கூறினீர்கள்.

ஆணைய அறிக்கை மீது, கடந்த 18-10-2022-ல் தமிழக சட்டமன்றத்தில்

நிகழ்ந்த வாதத்தின் போது தாங்கள் "துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட

அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தீர்கள்.

தூத்துக்குடி-தமிழக மக்களும், பிஜேபி தவிர்த்த அனைத்து கட்சிகளும் தங்களின்

உறுதிமொழியை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் 17-10-22 அன்று தங்களது அரசால் வெளியிடப்பட்ட G.O.No.SS

11/320-16/2022 அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின்

பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக

கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும்

உண்டாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை,

வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத்தடை நீக்கம், ஸ்டெர்லைட்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட

வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு

ரூ.1,00,000/-நிவாரணம் உட்பட பல்வேறு பொருத்தமான துயர்துடைக்கும்

பணிகளை செவ்வனே செயல்படுத்தி உள்ளீர்கள். இன்றுவரை ஸ்டெர்லைட்டை

திறக்க விடாமல் தடுத்து வருகிறீர்கள்.

துறை ரீதியிலான

குற்ற நடவடிக்கையும்,

கொன்றவர்கள் மீதான

நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என

எதிர்பார்த்தோம். 

தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை

படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல்

நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள்

ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக

அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.

தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக

நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, சட்டப் பேரவையில் தாங்கள் "தவறு செய்தோர் குற்றவாளிக்

கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்ற உறுதிமொழியை அமல்படுத்த,

அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து மேற்படி

அரசாணையை திரும்பப் பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு

நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள்

மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி

ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்றும் தங்களை

மிகுந்த நம்பிக்கையோடு தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு

கூட்டமைப்பு

இடம்: தூத்துக்குடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக