வியாழன், 24 நவம்பர், 2022

தூத்துக்குடி மாநகரத்தில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி

 தூத்துக்குடி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக 

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி மாநகரத்தில் 25-11-2022 இன்று காலை 7மணி அளவில் நடைபெற்றது.



தூத்துக்குடி லீக்ஸ் 2022நவம்பர் 25

தூத்துக்குடி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக

நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


சிறப்புஅழைப்பாளர்.G.சத்தியராஜ் (TPS) Deputy Superindent of Police

தூத்துக்குடி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு

ஆல்பர்ட் ராஜ்குமார், டாக்டர். சக்திவேல், டாக்டர். அஜய் சந்தோஷ் டேவிட் இருந்தனர். 


பின்னர் தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு

ஆல்பர்ட் ராஜ்குமார் தூத்துக்குடி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

புகை மற்றும் காற்று மாசு கெடும் அதிகமுள்ள தொழிற்சாலை உள்ள நமது மாவட்டங்களில் கண்பார்வை மங்குதல் புரை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு நோய் வந்துவிட்டால் அடுத்து கண்பார்வை குறைபாடு தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்குள்ளாக கண் பரிசோதித்து கொள்வது அவசியம்.

 ஜந்து வயது சிறு குழந்தைகளுக்கு கூட சத்து குறைபாட்டால் கண்பார்வை குறைபாடு ஏற்படலாம்.பெற்றோர்கள் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை வழங்க வேண்டும் மேலும் மிகஅதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகள் தவிர்க்கவும்அதுபோல் தொலைகாட்சி பெட்டி செல்போன் தொடர்ந்து அதிக நேரம் பார்க்க கூடாது என வலியுறுத்திகிறேன் என்றார்.தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு.

இவ்விழாவில் புனித அன்னை செவிலியர் கல்லூரி மாணவியர்கள்

மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பேரணியில்

கலந்து கொண்டார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக