வெள்ளி, 14 அக்டோபர், 2022

அ.இ.அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா‌ தூத்துக்குடியில் அதிமுக வினர் அனைவரும். வெகு விமர்சையாக கொண்டாடிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள்

 2022 அக்டோபர் 17ல் அ.இ.அதிமுக 50வது ஆண்டு பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா ஆரம்பமாகிறது.



தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் 51-வது ஆண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 50ஆண்டுகள் பொன்விழாவை நிறைவு செய்து வரும் 17/10/2022 திங்கட்கிழமை அன்று 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாண்புமிகு கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்ட கழகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகள் மற்றும் ஒன்றிய கழகத்திற்குட்பட்ட அனைத்துக் கிளைக் கழகங்கள் மற்றும் சிற்றூர்களில் அனைத்து இடங்களிலும் புதிய கழக கொடியை ஏற்றியும், அவ்விடத்தில் கழகத்தின் கொள்கை பாடல்களை ஒலி பெருக்கி மூலம் ஒலிக்கச் செய்தும், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கழகத்தின் 51வது ஆண்டு விழாவை கழகத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடிட வேண்டும்.


 இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, மாநகர பகுதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் செய்திடுமாறும் தங்களை இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், அக்டோபர் 18, செவ்வாய் கிழமை அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி பாளை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாலை 5 மணிக்கு மாபெரும் கழக ஆண்டு விழா பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது .


இதில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பி.ஜி.ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் எ.கே.சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.ஜீவா கணேசன், தீப்பொறி அப்பாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக