திங்கள், 20 ஜூன், 2022

தமிழன்டா இயக்கத் தலைவராக மீண்டும் ஜெகஜீவன் தேர்வு புதிய நிர்வாகிகள் பட்டியல்

 தமிழன்டா இயக்கம் செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகர் தனியார் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது



தூத்துக்குடி நாட்டுப்புற பாடகர் வி மாரிமுத்து தலைமை தாங்கினார் நிகழ்வில் காலாங்கரை நாட்டுப்புற கலைஞர் இசக்கி முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில் மறைந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரம்ம ராஜ் அவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி நினைவு நாளில் படத்திறப்பு விழா தமிழன்டா பாரம்பரிய திருவிழா குறித்தும் விருதுகள் வழங்கும் விழா குறித்தும் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்தும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும்தங்கள் கருத்து களை பேசினார்.

பின்பு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

 


தமிழன்டா இயக்கத் தலைவராக மீண்டும் ஜெகஜீவன் தேர்வு செய்யப்பட்டார் செயலாளராக கதிர்வேல் பொருளாளராக மணிகண்டன் துணைத்தலைவராக நாட்டுப்புற பாடகர் மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட மகளிரணி பொறுப்பாளராக கீழக் கரந்தை கிராமிய பாடகி முனியம்மாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் கலைஞர் ஆண்டி வடக்கு மாவட்ட தலைவர் சிவ காடு மாரியப்பன் வடக்கு மாவட்ட துணை தலைவர் நாதஸ்வரக் கலைஞர் மந்திரமூர்த்தி காளான் கரைப்பகுதி பொறுப்பாளர் இசக்கி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் பேச்சி துறை தூத்துக்குடி துணை மாவட்ட செயலாளர் புகைப்படக்கலைஞர் யாக்கோபு உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக