செவ்வாய், 7 ஜூன், 2022

4 வயது குழந்தையின் தொண்டையில் உலோக டாலர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கடும் முயற்சி யில் அகற்றம் பெற்றோர் மகிழ்ச்சி

 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது குழந்தையின் தொண்டையில் உலோகத்தால் ஆன டாலர்  வெற்றிகரமாக அகற்றப்பட்டது.



    தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை 06/06/2022 அன்று காலை 8 மணியளவில் கழுத்துச் சங்கிலியில் இருந்து உலோக டாலர் தவறுதலாக விழுங்கிவிட்டதால் உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும்

 மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 


எக்ஸ்ரே பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் கண்டுபிடிக்கப்பட்டது, 


இது குழந்தைக்கு உணவு விழுங்குவதில் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது. முதல்வர் டாக்டர். டி. நேருவின் அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். சிவசங்கரி, டாக்டர். சந்தானகிருஷ்ணகுமார், டாக்டர். ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழு டாக்டர். பலராமகிருஷ்ணன், டாக்டர். சுகிர்த்ராஜ் ஆகியோர் அடங்கிய அவசரக் குழுவினர் குழந்தைக்கு முழு மயக்க மருந்து கொடுத்து உணவுக் குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்து உலோக டாலரை அகற்றினர். 


குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிக்கு இலவசமாக செய்யப்பட்டது. 


முதல்வர் டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், ஆர்எம்ஓ டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினரை பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக