ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் இன்று தினகரன் நாளிதழ் தந்த அதிர்ச்சி!!!

 தூத்துக்குடி யில் வழக்கம்   போல நெல்லை பதிப்பு     தினகரன் நாளிதழ் விற்பனைக்கு  அதிகாலை தூத்துக்குடி மாநகர் கடைகளில் முழுவதும் சப்ளை செய்யப்பட்டது.





இன்று 29-08-2021 ஞாயிறு ஸ்பெஷல் என்பதால் தினகரன் நாளிதழ் இன்று மட்டும் அதிகம் பேர் பெட்டி கடைகளில் விரும்பி வந்து ஸ்டால் போஸ்டர் பார்த்து வியாபாரிகளிடம் வாங்கி செல்வார்கள்.

பேப்பர் கடைகாரர்கள் தங்கள் கடை முன் தொங்கவிடும் ஸ்டால் போஸ்டரை பார்த்து விட்டு தான் தொங்கவிடுவார்கள். ஏனெனில் தினம் வெவ்வெறு விலை இருக்கும். என்பதால் கவனித்துவிடுவது வழக்கம்.

10% சதவீதம் மட்டும் லாபம்  தங்களுக்கு கிடைக்கும் என்று கருதி கவனமாக இருப்பார்கள் கடைக்காரர்கள் உ- தா- ரூபாய் ஒன்றுக்கு 10 பைசா ?

  ஒரு நாளிதழ்  விலை ரூ 6 என்று இருந்தால் 60 பைசா லாபம் 10% மட்டுமே விற்பனை முகவர்கள் தருவார்கள்.


இன்று 29.08.2021 வெளிவந்த தினகரன் நாளிதழ் கடைகளில் தொங்கி கொண்டிருக்கும் ஸ்டால் போஸ்டரில் விலை ரூ 7- என்று விலை நிர்ணயம் செய்து அச்சிட்டு இருந்தார்கள்.

ஆனால்  ? தினகரன் நாளிதழ் - ல்   விலை ரூ 6 என அச்சிட்டு இருந்தார்கள்.

இதனால் தினகரன் நாளிதழ் கடைகளில்  வாங்கியவர்கள்

 பே ப்பர்ல உள்ள    விலை ரூ 6 தான் தரமுடியும் என தூத்துக்குடியில் பல இடங்களில் பே ப்பர் விற்பனையாகும் பெட்டி கடை வியாபாரிகளிடம் வாக்குவாதம் செய்து  சலசலப்பு ஏற்படுத்தினார்கள்.

வியாபாரிகள் ரூ6 என விற்றால் தங்களுக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகும் கிடைப்பதே 60 பைசா ? ஒரு ருபாய் நஷ்டமா? மல்லுகட்டினார்கள்

தினகரன் நாளிதழ் - ல் இன்று வந்த  கவனகுறைவான   விலை அச்சிட லால் வாசகர் களுக்கும். வியாபாரிகளுக்கும் ரொம்பவே ...அதிர்ச்சி தந்துள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக