*தூத்துக்குடி மாவட்டம் : 13.11.2020*
தூத்துக்குடியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 10.10.2020 அன்று தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலணியைச் சேர்ந்த சேசையா மகன் எடிசன் (33) என்பவர் தூத்துக்குடியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரின் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எடிசனை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான எடிசனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் எடிசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப மேற்படி எதிரிகளான தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலணியைச் சேர்ந்த சேசையா மகன் எடிசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா அவர்கள் எடிசனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக