மே 3 ஆம் தேதிக்கு பிறகு
தூத்துக்குடி நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரும் கடை திறந்து வணிகம் நடத்திட தூத்துக்குடி கலெக்டரிடம் வியாபார சங்க தலைவர் கோரிக்கை!!!
அதன் விபரமாவது;-
அனுப்புனர் . 27.04.20
பா.விநாயகமூர்த்தி
தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை*
தூத்துக்குடி மாவட்டம் ,
தூத்துக்குடி _628001.
பெறுநர்
*உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்*
தூத்துக்குடி மாவட்டம் ,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி.
ஐயா,
பொருள் : *தூத்துக்குடி நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் கடை திறந்து வணிகம் செய்ய அனுமதித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் காத்திட வேண்டுவது சம்பந்தமாக*.
வணக்கம்.
தற்போது நிலவிவரும் கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் அவர்கள் *விலகி இரு !*
*விழித்து இரு !!*
*வீட்டில் இரு !!!* என்ற அறிவிப்பினை ஏற்று தூத்துக்குடி மக்கள் அனைவரும் கடைபிடித்து வருவதும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தாங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் வணிகர்களாகிய நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ் கட்டுக்குள் இருப்பதுடன் மிக வேகமாக குறைந்தும் வருகிறது.
ஆதலால் தாங்கள் *மே 3* ஆம் தேதிக்கு பிறகு
தூத்துக்குடி நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரும் கடை திறந்து வணிகம் செய்ய அனுமதித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் காத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் விதிக்கும் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் இருப்பினும் அதனையும் உறுதியாக கடைபிடிக்க செய்வோம் என்றும் உறுதி கொடுக்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசிற்கும் தெரிவித்து
தூத்துக்குடி நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரையும் கடை திறந்து வணிகம் செய்ய அனுமதித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் காத்திட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
பழரசம். பா.விநாயகமூர்த்தி
தலைவர்
*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை*
தூத்துக்குடி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக