செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு 27 பேர் ஒருவர் இறப்பு!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்....
தற்போது  கொரானா  சிறப்பு சிகிச்சை வார்டில் 21 பேர் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா பாதிப்பு கடந்த சில தினங்களில்  14 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று ஏப்ரல் 20-ல்
2 புதிய நோயாளிகள் சேர்ந்துள்ளார்கள்.

நேற்று இவர் களுக்கு டெஸ்ட் எடுத்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் செய்துங்கநல்லூர் 1 மற்றும் கயத்தார்  பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், கோவில்பட்டியை சேர்ந்த இருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஆக மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 14  + 7+ 5 பேர். கொரானா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில்   கடந்த 10-04 2020 அன்று ஒருவர் மட்டுமே கொரானா வைரஸ் பாதிப்பில் இறந்துபோயுள்ளார்
இவ்வாறுதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை தரப்பில் உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி தகவல் தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக