செவ்வாய், 3 செப்டம்பர், 2019

இங்கிலாந்து வாழ் தமிழர் குடிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!!

தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில் வனகப்படுத்த ஆவணம் செய்யுமாறு .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இங்கிலாந்து வாழ் அனைத்து தமிழர் குடிகள் அமைப்பு கோரிக்கை மனு அளித்தனர்!!!

அந்த மனுவில் தெரித்திருதாவது:-
தமிழர்‌ குடிகள்‌ இங்கிலாந்து

அனுப்புனர்‌:
இங்கிலாந்து வாழ்‌ அனைத்து தமிழர்குடிகள்‌ அமைப்பு.


பெறுநர்‌:

மாண்புமிகு ஐயா.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்‌.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌, தமிழ்‌ நாடு. இந்தியா.
பொருள்‌:

தமிழர்‌ குடிகளை தனியாக அரசு சாதிப்பட்டியலில்‌ வகைப்படுத்துவது

சம்மந்தமாகவும்‌

தமிழக அரசாங்க வேலைகளில்‌ தமிழர்‌ குடிகளுக்கே 90%

முன்னுரிமை.

3. தேவேந்திரகுல வேளாளர்கள்‌ பட்டியல்‌ வெளியேற்றம்‌.
சம்மந்தமாகவும்‌.

4. பட்டியல்‌ இனத்தில்‌ இருக்கும்‌ தமிழர்‌ குடிகளை ஆதிதிராவிடர்‌என்று அடையாளப்படுத்தாமல்‌ ஆதிதமிழர்‌ என்று

அடையாளப்படுத்துதல்‌ சம்மந்தமாக.

உயர்‌ திரு ஐயா.

தமிழரின்‌ நீண்ட கால கோரிக்கைகள்‌ பல தங்கள்‌ பொற்காலத்தில்‌.
நிறைவேறுவது கண்டு நாங்கள்‌ மகிழ்ந்திருக்கிறோம்‌. தங்களின்‌ அரிய.
ஆட்சிக்கு முதற்கண்‌ நன்றி நவிழ எங்களது உலகமுழுதுமுள்ள தமிழர்‌ குடிகள்‌
பெருமையடைகிறோம்‌.

தமிழர்கள்‌ யார்‌ யாரெல்லாம்‌ என்பதை வகைப்படுத்தும்‌ வகையில்‌, தமிழர்‌
குடிகளை (சாதிகளை) தனியாக தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில்‌ வகைப்படுத்த
ஆவணம்‌ செய்யுமாறு உலகமுழுதுமுள்ள தமிழர்‌ குடிகள்‌ சார்பாக மாண்புமிகுஐயா தமிழக முதல்வராகிய தங்களை தமிழர்‌ இனம்‌ சார்பாக வேண்டிக்‌
கேட்டுக்கொள்கிறோம்‌.

தமிழரின்‌ பெரும்பான்மை குடிகளில்‌ தமிழரின்‌ பிரதிநிதித்துவமும்‌.
முன்னுரிமைகளும்‌ மண்ணின்‌ மைந்தர்களான தமிழர்கள்‌, “தமிழ்‌ நாடு அரசு
சாதி பட்டியலில்‌” தனியாக வகைப்படுத்தல்‌ வேண்டும்‌ என வேண்டி விரும்பி.
கேட்டுக்கொள்கிறோம்‌.

தமிழர்‌ குடியில்‌ உள்ள தமிழரல்லாத குடிகள்‌ இணைக்கப்பட்டு சாதிய ஊழல்‌
நடந்து பல குளறுபடிகள்‌ காலங்காலமாய்‌ நடைபெற்று வருகிறது
உதாரணத்திற்கு, வன்னியர்‌ குடிகளில்‌ பல குழப்பங்கள்‌ நிகழ்வதினை நாம்‌
அவதானிக்கலாம்‌. இவைகள்‌ அனைத்தையும்‌ களைவீர்கள்‌ என நம்புகிறோம்‌.
தமிழக அரசாங்க வேலைகளில்‌ தமிழர்‌ குடிகளுக்கே 90% முன்னுரிமை
அளிக்குமாறு வேண்டுகிறோம்‌, இதனால்‌ அனைத்து தமிழர்‌ குடிகள்‌
பொருளாதாரத்தில்‌ அடுத்த நிலையை எட்டி பயணிக்க. ஏதுவாக இருக்கும்‌.
மேலும்‌, தேவேந்திரகுல வேளாளர்கள்‌ பட்டியல்‌ வெளியேற்றத்திற்கான
உத்தரவையும்‌ தாங்கள்‌ ஆவணம்‌ செய்யுமாறு உலகமுழுதுமுள்ள அனைத்து
தமிழர்‌ குடிகள்‌ சார்பாக மாண்புமிகு ஐயா தமிழக முதல்வராகிய தங்களை.
வேண்டுகிறோம்‌.

பட்டியல்‌ இனத்தில்‌ இருக்கும்‌ தமிழர்‌ குடிகளை ஆதிதிராவிடர்‌ என்று
அடையாளபடுத்தாமல்‌ ஆதிதமிழர்‌ என்று தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில்‌
வகைப்படுத்தி ஆவணம்‌ செய்யுமாறு தங்களை வேண்டுகிறோம்‌.
மேற்கூறியவற்றை அனைத்தும்‌. நிறைவேற்றுவீர்கள்‌ என்ற நம்பிக்கையோடு
உங்களிடம்‌ இக்கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்‌.


தங்கள்‌ உண்மையுள்ள,

தமிழர்‌ குடிகள்‌ ஒருங்கிணைப்பாளர்‌

இங்கிலாந்து |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக