வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

உளவு துறை எச்சரிக்கை!!! தூத்துக்குடி மாவட்டம் முழவதும் பாதுகாப்பு ரோந்து பணி தீவிரம்.!!! தூத்துக்குடி எஸ்.பி. துரித நடவடிக்கை!!!

உளவுப்பிரிவு தகவல்..... 



தூத்துக்குடி மாவட்டத்தில்
காவல்துறையினர் உஷார்..!!!
மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள்
தலைமையில் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணி தீவிரம்.

               உளவுப்பிரிவு தகவலையடுத்து கடந்த (22.08.2019) இரவு முதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், புதுக்கோட்டை, புதூர்
பாண்டியாபுரம், சவலாப்பேரி, கயத்தாறு, கோடாங்கிப்பட்டி ஆகிய
இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்
ஆய்வாளர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்
தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி 6 சோதனைச் சாவடிகளில் வாகனங்களில்
சந்தேகத்திற்கிடமானவர்கள் செல்கின்றனரா, ஆயுதங்கள் போன்ற
சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என சுமார்
1500க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்துள்ளனர்.

தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து
உட்கோட்டங்களிலும், அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள்
மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் 112 தங்கும் விடுதிகளை
சோதனையிட்டு தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரித்தும்,
சந்தேகத்திற்கிடமானவர்கள் தங்கியுள்ளனரா எனவும், விசாரணை
செய்து சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்
நிலையங்களிலும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில்
காவல்துறையினர் அந்தந்த பகுதிகளில் வாகன தணிக்கை செய்து
மோட்டார் வாகனச் சட்டப்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்,
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் ஆகியவை உட்பட 712 வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 114 எதிரிகளை தணிக்கை
செய்து, அதில் 6 எதிரிகளையும் சேர்த்து முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக 41 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்அ.
வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 2 எதிரிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட
123 முன்னாள் குற்றவாளிகள் செயல்பாடுகளை கண்காணிக்கும்
வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு
வெடிகுண்டு நிபுணர் குழு, பைனாக்குலர் மற்றும் இரவு நேரத்தில்
தூரத்தில் வருபவர்களை துல்லியமாக தெரிந்து கொள்ளக்கூடிய
அளவிற்குள்ள பைனாகுலர், மெட்டல் டிடெக்டர்,
கடற்கரையோரங்களில் வேகமாக செல்லக்கூடிய வாகனம்,
கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள்
அடங்கிய காவல்துறையினர் இரண்டடுக்கு பாதுகாப்பு சுழற்சி
முறையில் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும் நபர்களை
தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் கூடுதலான
ரோந்துப்பணிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில்
ஊடுருவலை தவிர்க்கும் பொருட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பலத்த
பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக