செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்! ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி

 Tamil Nadu updates,

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்!

ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி ???

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பேனர் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் மற்றும் கராத்தே செல்வின் நாடார் ஆகியோரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்க முயன்றபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், இதற்கு மாறாக க.பெரியநாயகபுரம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையிலும், பசுபதி பாண்டியன் உள்ளிட்ட பலரது புகைப்படங்களுடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

thoothukudileaks


குறிப்பாக, அந்த பேனரில்   ....

” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

thoothukudileaks


ஒரு தரப்பினரின் பேனர்களுக்கு உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மற்றொரு தரப்பினர் வைத்துள்ள பேனர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது?

.

மேலும், பேனர் வைப்பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிமுறை பின்பற்றப்படுகிறதா? அல்லது சமூக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


சமூகங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படாத வகையில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரே மாதிரியான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


— தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக