Tamil Nadu updates
தூத்துக்குடி, ஜூலை 8:
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, தொழிற்சங்க வளர்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் வருகை !!!
கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும், மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகை தரும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ...
அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கல்விக்குமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ..ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், நீதி பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் பார்வதி, வீரபாகு, அன்பரசு, பிரபாகர், உத்தரபாண்டி, ஒலிமுத்து, எம்பி குமார், திருமணி, பாலகுமார், வைரமணி, ரத்தினமணி, திருப்பதி, ராமு, சின்னு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.
பட விளக்கம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக