வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

thoothukudileaks
மருத்துவமனையில்
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் போலீசாருடன் இளைஞர் உயிரிழப்பு குறித்து வாக்குவாதம் செய்தியாளர் இடம் பேட்டி அளித்தார்.


காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ..

கடந்த ஜூலை 17 அன்று தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின்போது, 180 மில்லி லிட்டர் கொள்ளளவுள்ள 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. 



இதையடுத்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 751/2026-ன் கீழ் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 அவரது உடல் சோதனை காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ...

பின்னர், அதே நாள் மாலை சுமார் 5.50 மணியளவில் அருணாசலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவ சான்றிதழ்!!!

அவரை பரிசோதித்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உடல்நிலை தகுதியானது என்றும், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் லாக் அப்!!!

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவர், பிற கைதிகளுடன் லாக்-அப்பில் வைக்கப்பட்டார். 

சிசிடிவி கேமரா செக்கப்!!!

அப்போது மற்ற கைதிகளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக்-அப்பிற்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மயக்கம் முதலுதவி!!!!

உடனடியாக காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து, குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அமர வைத்தனர். மேலும், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயாரையும் அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்று உயிரிழந்தார் 

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 23 அன்று அருணாசலம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறை!!!

இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக