Tamil Nadu updates 15-5-2026
photo news
by Arunan journalist
தூத்துக்குடி மே15
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு பயணமாக சென்ற எம்.எல்.ஏ. சரவணனுக்கு ராமசந்திராபுரம், புல்லாவழி மற்றும் கோவங்காடு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், குழந்தைகள் பட்டாசு வெடித்து மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
ராமசந்திராபுரம் பகுதியில் முதியோர் சிலர், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து பொருட்கள் வழங்காததால் மிகுந்த சிரமம் அனுபவித்து வருவதாக எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
இதற்கு பதிலளித்த சரவணன் எம்.எல்.ஏ., “கவலைப்பட வேண்டாம், உடனடியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதியளித்தார்.
அதேபோல் புல்லாவழி பகுதியில் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க டியூஷன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
உப்பள தொழிலைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., “நம்ம விஜய் ஆட்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், “நம் பகுதியில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு என் சொந்த செலவில் தினமும் உணவு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்” என மனிதநேயத்துடன் தெரிவித்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
கோவங்காடு பகுதியில் மக்கள் பஸ் நிறுத்தம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அனைத்தையும் விரைவில் செய்து தருவதாக எம்.எல்.ஏ. சரவணன் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திருமணி அஸ்வின், வசந்தன் சித்தன், புல்லாவழி கிளை கழக செயலாளர் அஜித்குமார், துணை கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்கிளி, சுரேஷ், கோவங்காடு கிளை கழக பொருளாளர் ஆகாஷ், கிளை கழக செயலாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக