Tamil Nadu updates 13-5-2026
photo news by Ravi
தூத்துக்குடி மே13
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் கடந்த 07.04.2026 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டனின் மனைவி பொன்மணி மணிகண்டன், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அரசு வேலை வழங்க வேண்டும் நீதியும் உதவியும் கிடைக்கவில்லை!!!
அப்போது அவர் கூறுகையில், ..
“எனது கணவரை சுட்ட உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கி, அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நீதியும் உதவியும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மே 26 ல் சாகும் வரை உண்ணாவிரதம்!!!
மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், வரும் 26.05.2026 அன்று ஆலங்குளத்தில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் சிலை முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக