செவ்வாய், 11 நவம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

 📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாகப் பெறும் வாராந்திர குறை தீர்க்கும் முகாம், நவம்பர் 12, 2025 (புதன்கிழமை) அன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி லீக்ஸ்


தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி லீக்ஸ்


இந்த முகாமில் மாண்புமிகு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு பிரிவுகளுக்கு உட்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் முக்கியமாக —

  • சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள்
  • குடிநீர் இணைப்பு மற்றும் பழுது சரிசெய்தல்
  • பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல்
  • பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள்
  • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் ஆகியவையாகும்.
மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது 
மேற்கு மண்டல மாநகராட்சியில் இஃது வரை 901 மனுக்கள் பெறப்பட்டன அதில் 4 மனு மட்டுமே பாக்கி இருக்கிறது மற்றவை அனைத்தும் தீர்வு காணப்பட்டது என்றார்.

மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய ஆவணங்களுடன் விரைவில் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி தொடர்ந்து இவ்வாறான குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📍இடம்: தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம்
📅 நாள்: 12.11.2025 (புதன்கிழமை)

தூத்துக்குடி லீக்ஸ் 🗞️


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக