வியாழன், 6 நவம்பர், 2025

தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. திமுக டென்ஷன்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

கோவை மாணவி மீதான பாலியல் வன்கொடூரம் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, நவம்பர் 6:
கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவியை மூன்று காமகொடுரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி சார்பாக இன்று (06.11.2025) காலை 10.00 மணிக்கு 

12- வாசல் மையவாடி முன்புள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுந்தன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளைத்தாய் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் முன்னிலையிலும்  கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மாணவிக்காக நீதி கோரி குரல் எழுப்பினர்.

டாஸ்மாக் கடை தான் காரணம்!!!

ஆர்ப்பாட்டத்தில் ... திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை டாஸ்மாக் தான் காரணம் என கொதித்தனர் 

இதில் மகளிர் அணி அனுசூயா உரையாற்றியபோது,
“முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குறித்து சர்ச்சையாகவும் பேசினார்.

சர்ச்சையாக பேசிய வீடியோ பார்க்க ...

பாஜக மகளிர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது. 

திமுக டென்ஷன் 

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசியலில் ஈடுபடவில்லை; அவர் ஒரு குடும்ப தலைவி. அவரை குறித்த சர்ச்சைக்குரிய ஆபாச கருத்துக்கள் காவல்துறை கவனிக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக