வெள்ளி, 10 அக்டோபர், 2025

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவோடு இரவு 10 செல்போன் திருட்டு பரபரப்பு – பெண்கள் கண்ணீர் மல்க புகார் மனு பேட்டி!

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவோடு இரவு செல்போன் திருட்டு – பெண்கள் கண்ணீர் மல்க புகார் மனு 

செய்தியாளர் இடம் பரபரப்பு பேட்டி!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு மர்ம திருட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.






தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று இரவில் 10மேற்பட்ட செல் போன்கள் பணம் திருடு போனதால் ..பரபரப்பு. பெண்கள் கண்ணீர் மல்க புகார் மனு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளும், அவர்களுடன் தங்கியிருந்த உறவினர்களும் தூங்கியிருந்த வேளையில், திருட்டு கும்பல் மருத்துவமனை வார்டுகளில் நுழைந்து 10 செல்போன்களையும் குருவம்மாள் என்ற மாற்றுப் திறனாளி எனறு பாராமல் அவரிடம் இருந்து ரூபாய் 3500பணத்தையும் அபேஸ் திருடிச் சென்றது.


விடிந்ததும் தங்கள் செல்போன்கள் காணாமல் போனதை உணர்ந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர் மல்க அலறியபடி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

thoothukudileaks

பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி அழுகை

“அரசு மருத்துவமனையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.



இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக