புதன், 17 செப்டம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் வாராந்திர கூட்டம் இன்று (17.09.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 10 மனுதாரர்களும், புதிதாக மனு அளிக்க வந்த 72 மனுதாரர்களும் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


எஸ் பி உடன் நேரில் சந்திப்பு!!

இதன்மூலம் மொத்தம் 82 பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.


மனுதாரர்களின் புகார்களை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக தேவையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வாரந்தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில் தீர்வு கிடைக்காதவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.


 என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக