சனி, 21 ஜூன், 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

 Tamil Nadu updates, photo news by Tamilan Ravi

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தேதி: ஜூன் 21, 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஜூன் 21ஆம் தேதி சிறப்பாக யோகா விழா நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னான்டோ தலைமையிலும், கல்லூரி செயலர் அருட்சகோதரி குழந்தை திரேஸ் முன்னிலையிலும் நடைபெற்றது. 



காலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியை பயிற்சியாளர் முத்துலட்சுமியும், என்.சி.சி. லெப்டினன்ட் மேரி பிரியாவும் மாணவிகளுக்கு வழிகாட்டியாக இருந்து நேரடியாக நடத்தினர்.



சுமார் 70க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவிகள் இதில் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவத்தையும், பல்வேறு ஆசனங்களின் பயன்களையும் புரிந்து கொண்டு ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.


மாணவிகளிடையே மன உறுதி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக