Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
காச நோய் இல்லா தமிழகத்திற்காக விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி, மார்ச் 17:
தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காச நோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சாரம் இன்று 100வது நாளை அடைந்ததை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலில் இருந்து ஒரு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
அம்மா உணவகம், காவல் நிலையம் வழியாக சென்ற பேரணி, திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.
வீடியோ பார்க்க 2
இந்த நிகழ்வில் மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், மற்றும் காச நோய் துணை இயக்குநர் டாக்டர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக