வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

மீண்டும் திறக்க வேண்டும் ஸ்டெர்லைட் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்....


, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு சிலரின் தவறான புரிதல் மற்றும் அந்நிய சதியால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது. 


ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அதே போன்று ஆலையின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், 400-க்கு மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் பத்திரிக்கை மூலம் ஆலையை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


அன்மையில் வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக, அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஆலையை மூட உத்திரவிடவில்லை. 


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்படி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதற்கான சான்றினை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. வெறும் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற துரதிஷ்டவசமான துப்பாக்கி சூட்டால் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது போல் "கூட்டமாக தவறு செய்தால் அது நியாயப்படுத்தப்படுகிறது தனித்து நேர்மையாக செயல்பட்டால் அது குற்றமாக்கப்படுகிறது" என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடல் எடுத்துக்காட்டாகும். 


ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளானதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த (NGT) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் "வலுவான காரணமின்றி ஆலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்திரவிட்டுள்ளதை" அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். 


அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி ஒருமுறை எடுத்த முடிவை /தீர்ப்பை சில ஆண்டுகளுக்குப் பின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கெளரவப் பிரச்சனையாக கருதாமல், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம். 


இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக