வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

மனிதநேய மக்கள் கட்சியின் 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டுபெயர் பலகை மற்றும் சிற்றுந்து கால அட்டவணை திறப்பு விழா நடைபெற்றது

தூத்துக்குடியில் பெயர் பலகை மற்றும் சிற்றுந்து கால அட்டவணை திறப்பு விழா நடைபெற்றது



தூத்துக்குடி: பெப்ரவரி 8

 மனிதநேய மக்கள் கட்சியின் 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி ஜாஹிர் உசேன் நகர் கிளை சார்பாக பெயர் பலகை மற்றும் சிற்றுந்து (மினிபஸ்) கால அட்டவணை திறப்பு விழா (07.02.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு நடைபெற்றது.



விழாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சுலைமான் தலைமை வகித்தார். 


நிகழ்வில் மாவட்டத் தலைவர் H.M. அகமது இக்பால் கலந்து கொண்டு பெயர் பலகையையும், சிற்றுந்து கால அட்டவணையையும் திறந்து வைத்தார்.






 "அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.


விழாவில் மாநகரத் தலைவர் அப்துல் சமது, மாநகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



 நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், மாநகர பொருளாளர் முகமது, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் அஃப்சல், வணிகர் அணி மாநகர செயலாளர் மெட்ரோ சேக், மாநகர துணை செயலாளர் உஸ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிக்கந்தர், சம்சுதீன், இப்ராஹிம், பள்ளி இமாம் அத்கர், முத்தலிப், S. இப்ராகிம், A.R. காதர்மைதீன், லூபி, முகமதுஹசன், A. மைத்தின், E. காஜாமைதீன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


R. அஃப்சல்,

மாவட்டச் செயலாளர் (ஊடகப்பிரிவு),

மனிதநேய மக்கள் கட்சி,

தூத்துக்குடி மாவட்டம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக