சனி, 8 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம், 08.02.2025

சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு 

Tamil Nadu updates,

news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 8, 2025


திருநெல்வேலி சரகத்தின் 29வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  இன்று பாராட்டி கௌரவித்தார்.



கடந்த 2025 பிப்ரவரி 1-ஆம் தேதி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் பல பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளை பெற்றனர். 

குறிப்பாக:....


- கொடி அணிவகுப்பு - முதல் இடம்

- 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - முதல் இடம்

- 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் - முதல் இடம்

- ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள் - இரண்டாம் இடம்


பாராட்டு விழாவில்.... தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஊர்காவல்படை வட்டார தளபதி  பாலமுருகன் மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த வெற்றி திருநெல்வேலி சரகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் சிறந்த பயிற்சி மற்றும் தயார்நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமது பாராட்டுரையில் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக