Tamil Nadu updates,18-12-2024
Photo news by
Arunan journalist
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் அடைப்பு: மது பிரியர்கள் திண்டாட்டம்
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் இன்று (18.12.2024) அடைக்கப்பட்டுள்ளன.
பார் உரிமையாளர்கள், காவல் துறையினர் தங்களுக்கு அநீதியாக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தால் போராட்டமாக பார்களை திறக்காமல் வைத்துள்ளனர்.
போராட்டத்தின் பின்னணி:
தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன்,
தனிநபர்கள் பார் நடத்த அனுமதி தந்துள்ளது.
பார் உரிமையாளர்களுக்கு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில்,
கழிவறை வசதி,
சுகாதாரமான சூழல்,
தரமான உணவு,
பிளாஸ்டிக் தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.
ஆனால், பல பார்கள் தமிழக அரசு விதிமுறைகளை மீறியும் அங்கு மதுபாட்டில்கள் விற்பனை யும் அசுத்தமான நிலையில் செயல்படுவதால் போலீசார் திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
மதுபான விவகாரத்தில் விதிமுறைகள் மீறல்:
டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சில பார்கள் முறைகேடாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை செயல்படுவதால் இது காவல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்திற்கும் நேரத்திற்கும் மாறாக செயல்படும் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பார்களின் எதிர்ப்பு:
பார்களால் விதிமுறைகளை மீறியதற்கு தொடர்ச்சியான போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பார் உரிமையாளர்கள் இது தங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.
தற்போது, பார்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
தலைமறைவாக ...?
இன்று பார் அடைப்பு நடத்தி வரும் வேளையில்...
பார் உரிமையாளர்கள் காவல்துறைக்கு கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்களாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக