செவ்வாய், 3 செப்டம்பர், 2024

கருங்குளம் அரசு பள்ளி ஆசிரியர் சக்திவேலுக்கு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கல்

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃3-9-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது தூத்துக்குடி கருங்குளம் அரசு பள்ளி ஆசிாியர் சக்திவேல்க்கு விருதுடன் ஓரு லட்சம் ரூபாய்  வழங்கப்பட்டது.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2024 ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. 



தேர்வு!!!

இந்நிகழ்ச்சியில்... மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். 


 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த முதன்மையாளர் தேர்வு நடைபெற்றது. 


புதுமையான பசுமை தயாரிப்பு!¡!


மீன் கழிவுகளின் இருந்து பதப்படுத்தப்பட்டு திரவ வடிவத்தில் எடுக்கப்பட்ட மீன் அமீலத்தில் 50மிலி எடுத்து அதோடு 10 லிட்டர் தண்ணீர் கலந்து  செடிகளின் மீது தௌித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை தன்னுடைய தோட்டத்தில் பாிசோதனை நடத்தி வெற்றி கண்டதோடு, நிறுத்திவிடாமல் அந்த மீன் அமிலங்களை பிற இடங்களில் நடப்படும், மரக்கன்றுக்களுக்கும் பசுமை பூங்காக்களுக்கும் ெதளிக்கப்பட்டு வருகிறது என்பது புதுமையான பசுமை தயாாிப்பாகும். 


ஈஷா மையம்!!! மரக்கன்று!!

மேலும் வருடந்தோறும் 50 ஆயிரம் மரகன்றுகள் வரை ஈஷா மையத்தோடு இணைத்து கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்தை சார்ந்த கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். 

மாணவர்களுக்கு விழிப்புணர்வு!!!

இளம் பருவத்தை சார்ந்த மாணவர்கள் தனது செல்போனில் பாா்த்து பொழுதை போக்காமலும், தன்னுடைய வாழக்கையை இழக்காமலும், இருக்கும் பொருட்டு தனது விவசாய பெற்றோர்களின் நிலைமையினை புாிந்து கொள்ளும் வகையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள கிராமங்களில் எல்லையில் உள்ள விவசாய நிலங்களோடு அழைத்து செல்லும் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

பிளாஸ்டிக் (நெகிழி) ஒழிப்பு!!!

அது போல் கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மண்ணில் புதைத்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த எண்ணற்ற நெகிழி கழிவுகளை கண்டெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மருத்துவ குணங்கள் உள்ள செடிகள் வளர்ப்பு!!!

இவர் வேலைப்பாா்க்கும் கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, மருதாணி, செடிகளும் காய் மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார். 



பாராட்டு விருது!!!

மேற்கண்ட இவாின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது ஆசிாியர் சக்திவேல்க்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இசக்கியம்மாள், சான்றிதழள் மற்றும் ரூ1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக