புதன், 1 மே, 2024

உப்பள தொழிலாளர் களுடன் மே தினம் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-5-2024

Photo Arunan 

news by sunmugasunthram Reporter 

2024 இன்று 1 மே தினம் உப்பள தொழிலாளர் கள் சங்கத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இருக்கிறார்கள்.

இன்று... உப்பள தொழிலாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மே தினம் கொண்டாடி தொழிலாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தார்.

உப்பள தொழிலாளர்களுடன் மே தினத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்!!! 
அடுத்து...

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.



      தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

     அதன்படி 60வது அடி சாலை பொிசன்பிளாசா மற்றும் போல்பேட்டை கீதாஹோட்டல் அருகில் ஆகிய இடங்களில் தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, நொங்கு, பதநீர், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், வௌ்ளாிக்காய், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.



தூத்துக்குடி கீதா ஹோட்டல் முன்புறம் உள்ள குடிநீர் பந்தல் 

       நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜான் அலெக்ஸாண்டர், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ாிக்டா, விஜயலட்சுமி, தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, வட்டசெயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதிகள் துரை, பிரபாகர், அருணகிாி, அரசு வழக்கறிஞர் மாலாதேவி, முன்னாள் கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொியசாமி, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், குமாா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக