திங்கள், 19 பிப்ரவரி, 2024

கொத்தடிமையாக இருந்த மூன்று மீனவர்கள் சிறையில் இருந்து விடுதலை

thoothukudileaks 

19-2-2024

Photo news by John posco

கொத்தடிமை யாக கொடுமை படுத்திய மூன்று மீனவர்கள் 

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

குவைத் நாட்டில் மீன் பிடிக்க சென்ற 

இராமநாத புரம் மாவட்டம்

தங்கச்சிமடத்தை 

சார்ந்த மீனவர் நெடிசோ, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கீழமனக்குடி மீனவர்

அனிஸ் மற்றும் ஆரோக்கியபுரம் மீனவர் விஜய் ஆகியோரை அங்குள்ள அரபி 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்து கொடுமைப் படுத்தபட்டனர்.

இந்த மீனவர்களை மீட்க பல்வேறு கட்ட வழிகளில் முயற்சி செய்யபட்டது

இந்நிலையில் 3 தமிழக மீனவர்களும்

உயிருக்கு பயந்து குவைத்தில் இருந்து

சிறிய மீன் பிடி படகு

மூலம் 10 நாள் 3000 கி.மீ கடலில் பயணித்து குவைத்திலிருந்து மும்பைக்கு தப்பி வந்தனர். 

அவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் 5 நாள் காவலில் வைத்து விசாரித்து மும்பை சிறையில் அடைத்தனர்.


 அவர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

    அதனடிப்படையில் சட்ட உதவியால் மும்பை சிறையில் இருந்து நேற்று (18/02/2024) மூன்று மீனவர்கள் விடுதலை ஆனார்கள்

இவர்கள் நேற்றிரவு 18-2-2024 இரவு விமானம் மூலம் கன்னியாகுமரி வருகிறார்கள். 

 மீனவர்கள் வரும் செய்தியை அவர்களின் குடும்பத்திற்க்கு தெரியபடுத்தப்பட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக