திங்கள், 11 டிசம்பர், 2023

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்பகுதி வளாகத்தில் டூவீலர் நிறுத்த கூடாது மீறுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து  நிலையத்தில் உள்ளே பொது மக்களுக்கும் போக்குவரத்தும்  இடைஞ்சலாக இருசக்கர வாகனம் நிறுத்த கூடாது

மிறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.



இதுபற்றி செய்தியாவது 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக  நகரினை அழகு படுத்தும் விதமாக பிரதான சந்திப்புகளில் செயற்கை  நீரூற்றுகள் அலங்கார வளைவுகள் அமைத்தல் போன்ற  பணிகளும் நடைபெற்று வருகின்றன. 


இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் புனரமைப்பு மற்றும்  அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி பேருந்து நிலைய வளாகங்களில்  போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

 எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களது வாகனங்களை முறையாக வாகன நிறுத்தும் இடங்களில் முறையாக நிறுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்படுகிறது .


 தவறும் நிலையில் மேற்படி வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்  என மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக